Breaking News

கேலிச்சித்திர நாயகன் அஸ்வின் காலமானார்

இளந்தலைமுறையிடம் பிரபலமாக பேசப்பட்டு
வந்த அஸ்வின் சுதர்சன் அவர்கள் மரணமடைந்துள்ள செய்தி இளம் ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊடக உலகத்தில் கேலிச்சித்திரங்களின் திறன் வித்தியாசமானது. ஆயிரம் சொற்கள் சொல்லும் அர்த்தங்களை ஒரு காட்டூன் சொல்லிவிடும். அந்த வகையில் அண்மையில் இடம்பெற்றுவரும் அரசியல் மாற்றங்களை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தியவர்களில் அஸ்வின் முதன்மையானவராக திகழ்ந்ததோடு இலங்கை ஊடக அமைச்சினால் விருதினையும் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப் பயணிக்கும் போது வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் , அவசிய மருத்துவம் இன்று சாவடைந்துள்ளார். உடலத்தை சிறீலங்கா கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இன்று அவரை இழந்தது மிகுந்த துயர் நிறைந்தது என்பதோடு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவருக்கு தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

அவரது சில கேலிச்சித்திரங்கள்