Breaking News

சர்வதேச நீதித் துறையின் தேவை குறித்து ஐ.நா. மீண்டும் இலங்கைக்கு பரிந்துரை



இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச நீதித்துறை அங்கீகரித்த நடைமுறைகள் கொண்ட ஒரு பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என ஐக்கிய நாடுகளினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரை அரசாங்கத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர, காணாமல் போனவர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளின் போது சர்வதேச நியதிகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் எனவும் அக்குழு அறிவுரை வழங்கியுள்ளது.

இந்த விசாரணைக் குழுவினால், 23 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது நடைபெற்று வரும் மனித உரிமைகள் கூட்டத்திலும் இது முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் இந்நாட்டில் சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகள் வேண்டும் என தெரிவித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள 2 ஆவது சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது என கூறப்படுகின்றது