நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஐ.தே.க. சளைக்காது முன்னோக்கி பயணிக்கும்
பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சளைக்காது ஐக்கிய தேசியக் கட்சியை 70 ஆண்டுகள் முன்னெடுத்து சென்றது போல், எதிர்காலத்திலும் கட்சியை முன்னேறிய உலகத்தை நோக்கி இட்டுச் செல்ல முதன்மையாக இருந்து செயற்பட போவதாக கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பியமக மல்வானை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் முதல் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க அனைத்து இன, மதங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய கட்சியின் முன்னோக்கிய பயணத்தை நிறுத்த போவதில்லை.
முன்னோக்கிய பயணத்தை மேலும் வலுப்படுத்த அடுத்த இரண்டு வருடங்களுக்குள் கட்சியில் மிகப் பெரிய மறுசீரமைப்பை மேற்கொள்ள உள்ளோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்