அரசாங்கத்தில் இணைந்ததனாலேயே இன்றைய மாநாடு வெற்றியளித்தது
கட்சியொன்றில் அதிகளவு மக்கள் கலந்துகொண்ட மாநாடு இதுவாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தில் இருப்பதனால்தான், இரு தடவைகள் தோல்வியடைந்த இந்த கட்சி இன்று இவ்வளவு முன்னேற்றமடைய முடிந்துள்ளது. ஜனாதிபதியினால், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
வரலாற்றில் அதிக மக்கள் தொகை கலந்துகொண்ட ஸ்ரீ ல.சு.க. கூட்டமொன்றை கடந்த மே தினத்தன்று காலியில் நடாத்தினோம். அந்த சாதனை இன்றைய வருடாந்த மாநாட்டில் முறியடிக்கப்பட்டுள்ளது எனவும் இன்றைய 65 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் மேலும் கூறினார்.