நல்லாட்சியில் இராணுவத்தால் அமைக்கப்படும் வீடுகள்(புகைப்படங்கள்)
வலிகாமம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பாது இராணுவத்தால் இனங்காணப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு நேரடியாக இராணுவத்தாலேயே வீடுகள் அமைக்கப்பட்டு அவர்களை குடியேற்றும் திட்டம் பற்றிய செய்தி அறியக்கிடைத்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவேண்டும் என வலியுறுத்திவரும் நிலையில் அவர்களில் ஒருதொகுதியினரை இவ்வாறு கட்டாயப்படுத்தி இராணுவம் கட்டும் வீடுகளில் குடியேற்றுவதன் மூலம் இதுவரை போராடிவந்த மக்களின் குரல்கள் ஓய்ந்துவிடும் என அரசு கருதுவதாக அறிய வருகின்றது.
அவர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதாகட்டும் அவர்களை சொந்த இடங்களில் குடியேற்றுவதாகட்டும் அதனை அரச அதிகாரிகளோ தொண்டு நிறுவனங்களே செய்ய வேண்டும் ஆனால் வடகிழக்கில் மாத்திரம் இராணுவத்தினர் சிவில் நிர்வாக வேலைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள் என்பதற்கு இது இன்னுமொரு சான்றாகும்.