பேருந்து, வான் மோதி விபத்து - நால்வர் பலி
தம்புள்ளை கலேவெல பகுதியில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்திற்க்குள்ளாகியுள்ளது.
இந்த அசம்பாவிதத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.