Breaking News

மஹிந்த காலத்தில் இரகசியம் பேசிய ஒருவர் பற்றி ஜனாதிபதி அறிவிப்பு



கடந்த கால அரசியலில் தன்னைப் போன்று பாரியளவில், உள ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.

என்னைப் போன்று கடந்த காலத்தில் கட்சிக்குள்ளும், வெளியிலும் உள ரீதியான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த ஒருவர்தான் மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே எனவும் ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளேயின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் பலர் தெரியாதிருந்த போதிலும், மறைந்த முன்னாள் அமைச்சர் தன்னுடன் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை வைத்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே உயிருடன் இருந்திருந்தால், தனக்கு முன்னர் கடந்த அரசாங்கத்திலிருந்து அவரே வெளியேறியிருப்பார் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.