போராட்டம் தொடரும்- அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம்
விடுமுறையை ரத்து செய்ய தொழில் ஆணையாளர் நடவடிக்கை முன்னெடுத்தாலும், தமது வேலைநிறுத்தப் போராட்டம் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமகே அறிவித்துள்ளார்.
தொழில் அதிகாரிகளின் கடமையை அத்தியாவசிய ஒன்றாக மாற்றுவதற்கு முடியாது எனவும் தொழில் அதிகாரிகள் தற்பொழுது விடுமுறையில் கடமைக்கு செல்லாமல் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லையெனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொழில் அதிகாரிகள் 379 பேர் காணப்படுவதாகவும், இவர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கமகே கூறியுள்ளார்.