கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்த தீர்மானம்
இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல தயாராக இருந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட போது பூனே விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் குறித்த சந்தேகநபர்தொடர்புபட்டிருப்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரின் பெயர் சுதன் சுப்பய்யா என்பதுடன், 2005ம் ஆண்டு வரை மாரிமுத்து என்றபெயரில் விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக தற்காலிக விசாயொன்றைவழங்குமாறு பூனே பொலிஸார் இலங்கை தூதுவராலயத்திடம்கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி அடுத்த வாரமளவில் குறித்த நபர் நாடு கடத்தப்படலாம் என்று இந்திய ஊடகசெய்தி வெளியிட்டுள்ளன.