Breaking News

தலையீடு அதிகரித்தால் இராஜினாமா - அமைச்சர் மனோ



தன்னுடைய அமைச்சின் செயற்பாடுகளில் தேவையில்லாது மூக்கை நுழைக்க முற்படுவார்களாயின் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக தேசிய நல்லிணக்க, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க மேம்பாட்டு நடவடிக்கைகளின் போது தன்னை அறியாது, அமைச்சின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் தன்னுடைய அமைச்சிலிருந்து இராஜினாமாச் செய்து சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் வழிகாட்டலின் கீழ் செயற்படும் தேசிய நல்லிணக்கம் ஒன்றுமை என்பவற்றுக்கான காரியாலயம் அமைச்சின் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் தலையிட்டு வருகின்றது. அதிகரித்து வரும் தலையீடுகள் அனைத்தையும் பொறுமை காக்க தான் ஒன்றும் பொம்மையல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்துக்கு அமைச்சொன்று இருக்கும் போது தனியான ஒரு காரியாலயம் அவசியமற்றது. இது தொடர்பில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.