யாழில் வாள் வெட்டு ; நான்கு பிள்ளைகளின் தந்தை கொலை
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
யாழ்ப்பாணம் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய க. சந்திரசேனரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் பணிகளில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.