Breaking News

நம்பிக்கையை சிதைத்துள்ள வடக்கு அசம்பாவிதங்கள்

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்த வேண்­டு­மாயின் நாட்டில் அமை­தியையும் சமா­தா­னத்­தை யும் பலப்­ப­டுத்­து­வ­துடன் அரச நிறு­வ­னங்­களை சரி­யாக வழி­ந­டத்த வேண்டும். தற்­போது அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்ள நிர்­வாகப் பிரச்­சி­னைகளே குழப்­பங்­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன என ஸ்ரீலங்கா  சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினரும் அமைச்சருமான சுசில் பிரே­ம்­ஜெ­யந்த தெரி­வித்தார். 


வடக்கில் நடந்த சம்­ப­வங்கள் மூலம் நாட்டின் அரச, சுயா­தீன திணைக்­க­ளங்கள் மீதான நம்­பிக்கை சிதை­வ­டைந்­துள்­ளது. ஆகவே உட­ன­டி­யாக அர­சியல் நகர்­வு­களில் மாற்றம் வேண்டும். இல்­லா­விட்டால் இதற்கு மேல் அர­சாங்­கத்தை கொண்டு நடத்த முடி­யாது எனவும் அவர் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் அரச நிறு­வ­னங்கள் மற்றும் திணைக்­க­ளங்கள் பாரிய அளவில் பல­வீனம்

அடைந்து வரு­கின்­றன. அதபோல் மக்­க­ளுக்கும் அரச திணைக்­க­ளங்கள் மீது உள்ள நம்­பிக்கை வீழ்ச்­சி­கண்டு வந்­துள்­ளது. அரச நிரு­வாக செயற்­தி­றனை பல­வீ­னப்­ப­டுத்த இட­ம­ளிக்கக் கூடாது. எனினும் தற்­போது அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்ள நிரு­வாகப் பிரச்­சி­னையே இந்த குழப்­பங்­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது இன்று அரச நிறு­வ­னங்­களில் என்ன நடந்து வரு­கின்­றது, அரச நிறு­வ­னங்கள் வீழ்ச்சி காண என்ன கார­ணங்கள் அடிப்­ப­டி­யாக அமைந்­துள்­ளது. தோல்­வி­யுற்ற அர­சி­யல்­வா­தி­களை அர­சாங்க நிறு­வ­னங்­களின் தலை­வர்­க­ளாக நிய­மித்து விடு­கின்­றனர். அவர்­க­ளுக்கு அனு­ப­வமோ அல்­லது தெளி­வான சிந்­த­னையோ இல்லை. இவற்றை தவி­ரு­துக்­கொள்ள வேண்டும்.

நாட்டை சரி­யான திசையில் கொண்டு செல்ல வேண்­டு­மாயின் அரச நிறு­வ­னங்­களை சரி­யாக வழி­ந­டத்த வேண்டும். பொரு­ளா­த­ரத்தை வளப்­ப­டுத்த வேண்­டு­மாயின் நாட்டில் அமை­தியும் சமா­தா­னத்­தையும் பலப்­ப­டுத்த வேண்டும். ஆனால் இன்று நாட்டில் நடக்கும் மோச­மான நிலை­மைகள் நாட்டின் அமை­தியை சீர­ளிக்கும் வகையில் அமைந்­துள்­ளது. வடக்கில் நடந்த சம்­ப­வங்கள் மூலம் நாட்டின் அரச சுயா­தீன நிறு­வ­னங்கள் மீதான நம்­பிக்கை சிதை­வ­டைந்­துள்­ளது. குறிப்­பாக பொலிஸ் திணைக்­களம் மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். வடக்கில் நடந்த சம்­ப­வத்தை நாம் முழு­மை­யாக கண்­டிக்­கின்றோம். இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெறக் கூடாது.

2009ஆம் ஆண்டு அணைந்த துவக்­குகள் மீண்டும் சீரிப்­பாய்ந்­தது அன்­றைய தினம் என யாழ் பல்­க­லைக்­க­ழக விவு­ரை­யாளர் ஒருவர் தெரி­வித்தார். அதை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். எனவே பொலிஸ் இவ்­வாறு மோச­மாக செயற்­பட்­ட­தற்கு பொலிஸ் திணைக்­களம் பொறுப்­புக்­கூற வேண்டும். இதை ஒரு சம்­ப­வ­மாக கருதி விட்­டு­விட முடி­யாது. ஆகவே பொலிஸ் திணைக்­களம் மீள் நிர்­மா­ணிக்­கப்­பட வேண்டும். பொலி­ஸாரின் மன­நிலை தொடர்­பிலும் சிவில் மக்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்­பிலும் கற்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். ஆகவே பொலிஸ் திணைக்­களம் இன்னும் கவ­ன­மாக செயற்­பட வேண்டும்.

அதபோல் அண்­மையில் புல­னாய்வு பிரிவின் 200இற்கும் அதி­க­மான முன்னாள் அதி­கா­ரி­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர். இது மிகவும் மோச­மான ஒரு சம்­ப­வ­மாகும். இதை தான் ஜனா­தி­பதி சுட்டிக் காட்­டினார். ஆகவே இவற்றை சரி­யான திசைக்கு திருப்ப வேண்டும். இல்­லா­விட்டால் மக்கள் பொலிஸ் திணை­க­ளத்தின் மீது வைத்­துள்ள நம்­பிக்கை போய்­விடும். வடக்கில் போலவே கொழும்­பிலும் மோச­மான சம்­ப­வங்கள் நடை­பெற்­றன. ஆயுத கலா­சாரம் பரவி வரும் நிலையில் அவற்றை நிறுத்த வேண்டும். அதற்­கான சரி­யான செயத்­திட்டம் கையா­ளப்­பட வேண்டும். அவ்­வாறு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மாயின் அர­சாங்­கத்­திற்கு என்ற ஒரு கொள்­ளையும் செயற்­திட்­டமும் அவ­சி­ய­மாகும்.

மேலும் தற்­போது புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. உப குழுக்­களின் அறிக்­கைகள் தற்­போது விவா­தத்­திற்கு விடப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் இன்று வரையில் அரசின் தன்­மைகள் தொடர்பில் எந்­த­வித விவா­தமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அரசு எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்றும் சட்டம் எவ்­வாறு கையா­ளப்­பட போகின்­றது, 

ஐக்­கியம் என்­பதன் தன்மைகள் தொடர்பில் விவாதம் ஒன்றுகூட இன்றுவரையில் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் 1972ஆம் ஆண்டு அரசின் தன்மைகளை சரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி உள்ளது. ஆகவ இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கமாக நாம் சரியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு மேல் அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது என்றார். .