Breaking News

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி



யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் வடமாகாண சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண சபையின் 64ஆவது அமர்வு இன்று காலை 9.30 அளவில் யாழ்ப்பாணம் – கைதடியிலுள்ள வடமாகாண கட்டிடத்தில் கூடியது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றிருப்பதால் சபைக்கு அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கினார்.

இதன்போது சபையில் கூடியிருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்திருந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது