Breaking News

சபாநாயகரை அச்சுறுத்திய விமல்

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சட்டமூலம் மீதான் விவாதம், நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை (05) இடம்பெற்றபோது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தொடர்ந்து சபைக்குள் கதைத்துக்கொண்டிருந்ததால் சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. 

 குறித்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கை போதுமானதாக இல்லை என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதன்போது, விமல் வீரவன்ச தொடர்ந்து கதைத்துக் கொண்டிருந்ததையடுத்து, சபாநாயகர் “என்னை அச்சுறுத்த வேண்டாம்” என்று தெரிவித்தார்.