மின்கம்பி அறுந்துள்ளது அவதானம்....!!
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகில் சற்று நேரம் முன்பு (10.20pm ) மின்கம்பியொன்று அறுந்து வீழ்ந்துள்ளது. இதனால் பாரிய சத்தத்துடன் உடனடியாக மின்துண்டிக்கப்பட்டாலும் சற்று நேரத்தில் மீண்டும் மின்சாரம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மின்சார நிலையத்துக்கு அறிவித்த நிலையில் ஊழியர்கள் சரிசெய்வதற்கு வருகை தருவதாக தெரிவித்தள்ளனர். இந்நிலையில் வீதியால் வருபவர்கள் அவதானத்துடன் செயற்படுங்கள்.