Breaking News

லசந்த படுகொலை – 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை விசாரிக்கத் திட்டம்



சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அனுமமதி கோரியுள்ளது.

லசந்த படுகொலை தொடர்பாக விசாரணை செய்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பாக 12 புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனினும், இவர்களை விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லசந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேலும் 12 புலனாய்வு அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.