தாயகமெங்கும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி -முழு விபரங்களும் இணைப்பு.
தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் இன்று தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.
பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும், வீடுகளிலும் மாவீரர்களுக்கு சற்று முன்னர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.
இன்று மாலை 6.05 மணியளவில் மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து, அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதையடுத்து, 6.07 மணியளவில் தமிழர் தாயகப் பகுதிகளிலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும், ஒரே நேரத்தில் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
தமிழர் தாயகத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றன.4
உடுத்துறை
யாழ் பல்கலை
தமிழ் தேசிய மக்கள் முன்னனி
மட்டக்களப்பு
நெடுங்கேணி, ஒலுமடு விளையாட்டு மைதானத்தில்
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்
வல்வெட்டித்துறையில் லெப் கேணல் சங்கர் நினைவுத்துபியில்
முழங்காவில் துயிலுமில்லம்