Breaking News

ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்படும்!

புதிய அரசியலமைப்பில் தனி மாகாணங்கள் உருவாகவோ அல்லது ஒற்றையாட்சியை சிதைக்கவோ இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, ஒற்றையாட்சியின் கீழ் இந்நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.


தமது அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இலங்கை மீதான ஐ.நா.வின் அழுத்தம், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்புகள் போன்றவை சிறிது சிறிதாக மறைந்து வருவதாக குறிப்பிட்ட எஸ்.பி, நாட்டின் ஐக்கியத்தை சிதைக்க ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அதற்கேற்றாற் போலவே புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.