Breaking News

ஒன்ராறியோ பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்



கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று, ஒன்ராரியோ பிரதமர் கத்லீன் வைன் அம்மையாரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஒன்ராறியோ பிரதமரின் குயீன்ஸ் பார்க் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்று ஒன்ராறியோ பிரதமர் செயலகம் கூறியுள்ளது.

ஒன்ராறியோ மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு விரும்புவதாக ஒன்ராறியோ பிரதமர் தெரிவித்துள்ளார்.nஇந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.