Breaking News

சாய்ந்தமருதில் வானுடன் பேரூந்து மோதி கோர விபத்து: மூவர் உயிரிழப்பு



அக்கறைப்பற்று – மட்டக்களப்பு பிரதான வீதியின் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை பேரூந்துடன் வான் மோதி விபத்திற்குள்ளாகியதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 19 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, எதிரே வந்த வானுடன் மோதியலில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரூந்தின் சாரதியை கைதுசெய்துள்ள கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.