Breaking News

ஒரே நாடு,ஒரே இனம் தமிழ் அலுவலர்களிடம் சத்தியக்கடதாசி(ஆதாரம்)


நல்லாட்சி எனச்சொல்லப்படுகின்ற இன்றைய ஆட்சியின் இனவாதத்தின் உச்சமாக இன்றையநாளில் வடக்கிலுள்ள தமிழ் அரச அலுவலகங்களில் சிங்கள பேரினவாதம் தனது கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளது.


சிங்கள பேரினவாத அரசால் அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுநிருபம் ஒன்றின்ஊடாக அனைத்து அரச அலுவலர்களும் அந்த சத்தியப்பிரமாண உடன்படிக்கையில் கையொப்பம் இடுமாறு பணிக்கபட்டுள்ளது.

அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட சத்தியப்பிரமாண ஆவணத்தில் இன்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதிய ஆண்டில் ஒரே நாட்டின்,ஒரே இனத்தின்,ஒரே கொடியின் நிழலில் உறுதியெடுத்து சத்தியப்பிரமாணம் செய்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை அலுவலகங்களில் இன்று வாசிக்கப்பட்டு கையொப்பம் பெற முயற்சிக்கப்பட்டதாக தமிழ்க்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. சில இடங்களில் சிங்கள அதிகாரிகளால் குறித்த பிரமாண பிரதி வாசித்து காண்பிக்கப்பட்டு அவற்றை மீண்டும் சத்தமாக சத்தியப்பிரமாணம் செய்யுமாறும் பணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்