Breaking News

ஏறுதழுவுதல் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய மாணவன் விபத்தில் பலி



கிளிநொச்சியில் நேற்றுமாலை நடந்த ஏறுதழுவுதல் தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிய ஊடகத்துறை மாணவன் விபத்து ஒன்றில் சிக்கி மரணமானார்.

ஏறுதழுவுதல் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாக, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக நேற்றுமாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்று விட்டு, உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுப்பிரமணியம் முரளிதரன் என்ற ஊடகத்துறை மாணவன், பாரஊர்தி மோதி மரணமானார்.

புளியம்பொக்கணையில் நேற்றிரவு 7.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் மரணமான சுப்பிரமணியம் முரளிதரன், யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை கற்கைநெறியை கடந்த ஆண்டிலேயே நிறைவு செய்திருந்தார்.