Breaking News

பிரபாகரனைவிட விக்கினேஸ்வரனின் த.ம.பேரவை ஆபத்தானது(காணொளி)


விடுதலைப் புலிகள் அமைப்பை வி்டவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை மிகவும் ஆபத்தான அமைப்பு என பொது பல சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பிரபாகரனின் காலத்தில் எமக்கான அச்சுறுத்தல் என்ன என்பது எமக்கு தெரிந்திருந்தது ஆனால் விக்கிகினேஸ்வரனும் புலம்பெயர் தமிழர்களும் மிகவும் தீவிரமாக சர்வதேச ரீதியில் தமது பிரிவினைவாத செயற்பாடுகளை வெற்றிகொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள அங்கவீனமுற்ற இராணுவத்தினரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்கிய பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.




முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்