Breaking News

சிறினேசனின் பேச்சுக்கு வியாழேந்திரன் பதிலடி(காணொளி)


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்
சிறினேசன் அவர்கள் அண்மையில் பொய்யான கழுதைக் கதையைக்கூறி தனது வங்குரோத்து அரசியலை நடத்துகின்றார் எனவும் உங்கள் வங்குரோத்து அரசியலுக்கு வேதாகம பகுதிகளையோ பகவத்கீதை போன்ற புனித நூல்களை பயன்படுத்தவேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

உங்களைப்போன்று நான் கட்சிக்கு பயந்தோ அல்லது தலைமைக்கு பயந்தோ செயற்படவில்லை நான் மக்களின் பிரதிநிதி நீங்கள் உண்மையாக த.தே.கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள் முதலில் த.தே.கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யுங்கள் நாங்கள் கட்சியை நம்பி வரவில்லை மக்களை நம்பி வந்தவர்கள். மக்களில் ஒருவனே நான் எனவும் தெரிவித்துள்ளார்.




மயிலம்பாவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் க.சிறீதரன் தலைமையில் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்