Breaking News

மீதொட்டமுல்லையில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவினால் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தனர். 

இந்த அஞ்சலி நிகழ்வில், கலைப்பீட பீடாதிபதி எஸ்.சிவநாதன் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். 

இச்சம்பவத்திற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டுமென்றும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளதுடன், இதுபோன்ற அனர்த்தங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க ஆவண செய்ய வேண்டுமென்றும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.