Breaking News

முடங்கியது யாழ் நகர்



தமிழர் தாயகப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி அவர்களது உறவினர்களால் இன்று வியாழக்கிழமை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் நடத்தப்படுகின்றது.

இந்த ஹர்த்தால் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் எனப் பலரும் முழுமனதுடன் ஆதரவை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை முதல் ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

மேலும் வங்கிகள், பஸ் நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளதோடு வெறிச்சோடி நிலையில் யாழ் நகர் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது