Breaking News

என்னை வேண்டாதவனாக பார்க்கும் சம்பந்தன்-விக்கி சாடல்(காணொளி)

இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடனான
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடலிற்கு வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த முதலமைச்சர் அவர் எனக்கு கைலாகு கொடுத்துவிட்டு சென்றுள்ளார் வேறு விடயங்கள் பேசவில்லை எனத்தெரிவித்துள்ளதோடு கூட்டமைப்பு மோடியை சந்தித்தபோதும் அதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் நான் வேண்டாத ஆள் தானே என்றும் அதனால் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் வடமாகாண  முதலமைச்சர் சிரித்தவாறே தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியவின் சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, இந்திய பிரதமர் மோடியுடன் இன்று நடைபெறவுள்ள சந்திப்பு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்