Breaking News

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர உள்ள உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை


மூன்று தசாப்தகால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அவர்களின் குடும்பங்களுக்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றினூடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது, ஒரு சிலருக்கு அந்த நிகழ்வுகளை நடத்த தடை ஏற்படுத்தப்பட்டமை குறித்தும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.