Breaking News

சம்பூரில் உயிருடன் கரையொதுங்கிய 20 திமிங்கலங்கள்



திருகோணமலை – சம்பூரில் 20 இற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும் சிறிலங்காவில் கொட்டிய கடும் மழையைத் தொடர்ந்து, சம்பூர், பழைய இறங்குதுறைப் பகுதியில் 20இற்கும் அதிகமான திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கின.

நீந்த முடியாமல், கரையொதுங்கிய திமிங்கலங்களை சிறிலங்கா கடற்படையினரும், உள்ளூர் பொதுமக்களும், மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்று விடும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

ஆழ்கடலில் காணப்படும் திமிங்கலங்கள் ஆழம் குறைந்த கடற்கரையை நோக்கி வந்தமைக்கான காரணம் தெரியவில்லை.


கூட்டமாக பெருமளவு திமிங்கலங்கள் கரையொதுங்கிய சம்பவத்தினால் சம்பூரில் பரபரப்பான நிலை காணப்பட்டது.