Breaking News

தமிழரசுக் கட்சி மேலாதிக்கம் சீறுகிறார்- சித்தார்த்தன்(காணொளி)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்
அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை நீடிக்கின்றதா?

இலங்கை தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளை உதாசீனம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், புளொட் எனப்படும் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தக் கருத்தினை வெளியிட்டார்.