அமைச்சு பதவியில் இருந்து விலகுகிறார் டெனீஸ்வரன்?
வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா தொடர்பில் உத்தியோகபூர்வ அறி விப்பை விடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரெலோவின் தலைமைக்குழு (சனிக்கிழமை) காலை வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் போது வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனும் கலந்து கொண்டி ருந்தார். குறித்த தலைமைக்குழு கூட்டத்தில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு வழி சமைக்கும் முகமாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு ரெலோ தலைமைக் குழு கோரியிருந்தது.
எனினும் உடனடியாக பதவி இராஜினாமாவிற்கு மறுப்பு தெரிவித்து வந்த அமைச்சர் பா.டெனீஸ்வரன் இதற்கான கால அவகாசத்தை கோரியிருந்தார். இந்த நிலையில் கட்சியின் கோட்பாடுகளுக்கு அமைவாக தனது முடிவை அறிவிப்பதாக அமைச்சர் குறித்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும் எவ்வித முடிவுகளையும் அமைச்சர் அறிவிக்கவில்லை என தெரிய வந்த நிலையில், வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சு பதவி இராஜினாமா தொடர்பில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ள தாகவும்.
வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் குறித்து நான் கவலை அடைவ தாகவும் வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.