Breaking News

யாழ்ப்பாணத்தில் கடலுக்கு சென்ற ஆறு மாணவர்கள் பலி(காணொளி)

யாழ் மண்டைதீவு கடற் பகுதியில் சற்றுமுன்னர் நடந்த படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரது உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மண்டை தீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கடலுக்குச் சென்றபோதே இந்த இடர் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது.