Breaking News

மஹிந்த மனநோயாளி என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே கட்சியின் தலைமை பத­வியை ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கி­யி­ருந்தார். தற்­போது தான் பத­வியை வழங்­க­வில்லை என்கிறார். எனவே அவ­ருக்கு மனநோய் என்றே அமைச்சர்எஸ்.பி.திஸா­நா­யக்க அறிக்கை விடுத்துள்ளார்.  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள கண் வைத்­தி­ய­சாலை ஒன்­றினை மேற்­பார்­வை­யிட்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  மேலும் தெரி­விக்­கையில், 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலின் பின்­னர் சபா­நா­யகர் சமல் ராஜ­பக்ஷவின் வீட்டில் சுதந்­திரக் கட்சி முக்­கி­யஸ்தர்­களின் சந்­திப்­பொன்று இடம்­பெற்றபோது சுதந்­திரக் கட்­சியின் தலைமைத்­துவம் மாற்­ற­ப்ப­டுமா இல்லையா என்­பது குறித்து பேசப்­பட்­டது. 

அதன்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கட்­சியின் தலை­மைத்­து­வத்தை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் வழங்­கு­வ­தாக கோர ப்பட்டது.

அன்றைய கட்­சியின் செய­லா­ள­ரா­க­வி­ருந்த அமைச்சர் சுசில் பிரே­ம்ஜ­யந்­த­வி­டத்தில் அவ­ச­ர­மாக தலைமைத்­து­வத்தை மாற்றும் பத்­தி­ரத்தில் கைச்சாத்­தி­டுங்கள் என்றும் கூறியுள்ளார். 

தற்­போது தன்னை யாரும் விலக்­க­வில்லை. தானே கட்­சியின் தலை­வர் என்று கூறு­கின்றார். இதனால் மனநோயாளி ஆகிவிட்டோரோ என்ற சந்­தேகம் ஆரம்பித்துள்ளத­னால்தான் அவரே வழங்கிய தலை­மைத்­து­வ­த்தை தற்­போது இல்லையென மறுத்து வருகின்றார்.