Breaking News

முடிந்தால் மோதி பாருங்கள், நான் பதவி விலக மாட்டேன்- டெனீஸ்வரன்

நான் சுயமாக முன்வந்து எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யப்போவதில்லையென அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நான் எனது பதவியை இராஜினாமாச் செய்யப்போவதில்லை. தேவையெனில் முதலமைச்சரோ, எனது கட்சியினரோ அதனைச் செய்யட்டும். எனக்கு முதலமைச்சரோ கட்சியோ முக்கியமில்லை அவர்கள் தவறிழைத்துவிட்டார்கள்.  முன்னாள் போராளிகளுக்கு தெரியும் நான் என்ன செய்தேன் என்று அவர்கள் எனக்கு ஆலோசனை வழங்கி வருகின்றார்கள் அவர்கள் என்ன கருதுகிறார்களோ அதன்படி நான் முடிவெடுப்பேன் எனவும் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் நாள் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் டெனீஸ்வரனை பதவி விலகுமாறு கட்சி தெரிவித்திருந்தது. அவர்பதவி விலகாவிடின் அவர்கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனவும் அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.