Breaking News

ரவி நிரபராதியாகிவிட முடியாது.

விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார 

திஸாநாயக்க வலியுறுத்தல். அமை ச்சுப் பத­வியில் இருந்து இரா­ஜி­னாமா செய்­த­வுடன் ரவி கரு­ணா­நா­யக்க நிர­ப­ரா­தி­யாகி விட முடி­யாது. அவர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னெ­டுக்க வேண்டு மென்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார். மத்­திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாது­காக்­கின்­றார். ஆகவே இவர்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­புகள், இந்த ஊழலில் வேறு நபர்கள் கொண்­டுள்ள தொடர்­புகள் குறித்து ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. 

இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியில் இருந்து இரா­ஜி­னாமா செய்­ததன் பின்னர் மீண்டும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் சகல தரப்பினரும் கருத்­துக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­துள்­ளனர். 


இதில் ரவி கரு­ணா­நா­ய­காவை நியா­யப்­ப­டுத்தும் அரச தரப்பு இந்த செயற்­பாடு நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அடை­யாளம் எனவும், மஹிந்த தரப்­பினர் இதனை தமது வெற்­றி­யா­கவும் கூறிக்­கொண்­டுள்­ளனர். குற்றம் புரிந்த நப­ருக்கு வேறு அடை­யாளம் கொடுப்­பதால் குற்­றத்தில் இருந்து அவர் விடு­ப­டுவார் என்று அர்த்­தப்­ப­டாது. 

ஆகவே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நிதி அமைச்சில் இருந்த போது மேற்­கொண்ட ஊழல் மோச­டி­க­ளுக்­காக அவரை வெளி­வி­வ­கார அமைச்­சிற்கு மாற்­று­வதனாலோ அல்­லது அமைச்சு பத­வியில் இருந்து நீக்­கு­வதாலோ அவர் நிர­ப­ராதி என்று ஒரு­போதும் அர்த்­தப்­ப­டாது. 

அவரை அமைச்சுப் பத­வியில் இருந்து நீக்­கி­யமை ஊழல் மோச­டிக்­காக அவ­ருக்கு கொடுத்த தண்­டனை என்ற கருத்தை முன்­வைக்க அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. கடந்த 2015 ஆம் ஆண்டு மத்­திய வங்கி ஊழல் வெளி­வந்த போதே அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­விற்கு எதி­ராக பல்­வேறு குற்­றங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

இவ்­வா­றான குற்­றங்கள் சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தார். ஆறு மாத காலத்­திற்­காக வாடகை வீடு எடுத்­த­மையும் அதற்­கான 14.5 இலட்சம் ன் ரூபா மாதாந்­த­மாக செலுத்­தி­ய­மையும் இந்த காலத்தில் இடம்­பெற்­றது. இவர்கள் மத்­தியில் கறுப்பு பணமே பரி­மாற்­றப்­பட்­டுள்­ளது.

இவர்கள் பரி­மாற்­றி­கொண்ட எந்த வர்த்தகம் தொடர்­பிலும் சரி­யான உடன்­ப­டிக்­கைகள் இல்லை. ஆகவே இந்த விட­யத்தில் மிகப்­பெ­ரிய ஊழல் நடந்­துள்­ளது. இந்­நி­லையில் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை உதா­ரா­ண­மாக கொண்டு ஏனைய அமைச்­சர்கள் செயற்­பட வேண்டும் என அர­சாங்கம் புக­ழாரம் சூட்­டு­கின்­றது. 

ஆனால் ரவி கரு­ணா­நா­ய­கவை எவரும் உதா­ர­ண­மாக கருத வேண்டாம். பாட­சாலை மாண­வர்கள் அவரை உதா­ர­ண­மாக நினைக்க வேண்டாம். மக்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டித்து, அரச சொத்­துக்­களை சூறை­யாடி இந்த ஊழல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­த­வுடன் தப்­பிக்க வேறு வழி­யில்­லாது தனது பத­வியில் இருந்து வில­கிய நபரை எவ்­வாறு நியா­யப்­ப­டுத்த முடியும். 

ஆகவே ரவி கரு­ணா­நா­யக்க தொடர்பில் உட­ன­டி­யாக ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு விசா­ர­ணையை முன்­னெ­டுக்க வேண்டும். அதேபோல் ரவி கரு­ணா­நா­யக்க விட­யத்தில் வெளி­வந்­துள்ள உண்­மை­களின் பின்­னணி மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­துள்­ளது. 

மத்­திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாது­காக்­கின்­றார். ஆகவே இவர்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­புகள், இந்த விட­யத்தில் வேறு நபர்கள் கொண்­டுள்ள தொடர்­புகள் குறித்து ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். 

ஆனால் இன்று கொள்­ளை­யர்­க­ளுக்கு பதி­லாக யாரை நிய­மிப்­பது என்­பதில் அர­சாங்கம் சிக்­கலில் உள்­ளது. கள்ளர் கூட்­ட­ணியை ஒழித்­து­விட்டு மாற்­றாக மீண்டும் கள்­ளர்­களை கொண்­டு­வ­ரவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அமைச்சர் திலக் மாரப்­பன இதற்கு நல்ல உதா­ர­ண­மாவார். 

அதேபோல் முன்­னைய ஆட்­சியில் மஹிந்த ராஜபக் ஷ குடும்ப ஊழ­லிலும் உண்­மை­களை மூடி மறைக்கும் நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே பிர­தான இரண்டு கட்­சி­களும் முழு­மை­யாக ஊழல் மோச­டி­களை அடிப்­ப­டை­யாக வைத்தே ஆட்சி செய்து வருகின்றன. 

அதேபோல் கொள்ளையர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தியாகிகளாக மாற்றப்படுகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் தியாகிகளாக மாறப்பாக்கின்றனர். இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். 

மக்கள் இதனை தெளிவாக விளங்கிக்கொண்டு மாற்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த மாற்றத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.