Breaking News

இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய நாட்டை விட்டு வெளியேறினார் – அமெரிக்கன் போஸ்ட்!

முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரே சிலை விட்டுத் தப்பித்தது தண்டனை க்குப் பயந்தே என்பதில் சந்தேகமி ல்லை. தென்னமெரிக்க நாடான பிரே சிலின் சட்டத்தின்படி போர்க்குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒரு வர் பிரேசிலில் தங்கியிருந்தால் அவர் மீது வழக்குத் தொடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்கமுடியும் என்ற கார ணத்தினாலேயே மனித உரிமைச் செயற்பட்டாளர் ஒருவர் வழக்குத் தொட ர்ந்ததையடுத்து சிறிலங்காவில் இருந்து தப்பியோடினார் என அமெரிக்கன் போஸ்ட் அறிக்கை விடுத்துள்ளது. 

 இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்டின் கேட் குரோனின் ஃபாமன் என்ற செய்தியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா அங்கத்துவம் பெறாதமை யால், போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உள்ளூரில் விசாரணை நடை பெற்றால், அதன்மூலம் தண்டனை வழங்கப்படாமல் விடுபடலாம். எனவே தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தென்னமெரிக்க நாடான பிரேசிலில் வழக்குத் தொடுத்தார். 

பிரேசிலின் சட்ட முறைமையின்படி தமது நாட்டுக்குள் வந்த ஒருவர் இனப்படு கொலை, சித்திரவதை போன்ற குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் குற்றவாளி யாக காணப்பட்டால் தண்டனை வழங்க முடியும். அத்துடன், லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு தீர்மா னித்தால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நிலையிலேயே அவர் பிரேசிலைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.