11 வயது சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய வாலிபன்
கொழும்பு – கொச்சிக்கடை ஏத்கால பகுதியில் சிறுமி ஒருவரை அநுராதபுரத்துக்கு அழைத்துச் சென்று மனைவியாக்கி அவருடன் ஒன்றாக வசித்து வந்த நபர் ஒருவரை கொச்சிக்கடை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்.
கொச்சிக்கடை- ஏத்கால பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமொன்றில் உயர் பதவியில் பணியாற்றிய சந்தேகநபர் சிறுமியை பெற்றோருக்குத் தெரியாமல் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
11 வயதுடைய சிறுமி அடிக்கடி உதவிகளுக்காக அத்தொழிற்சாலைக்கு வந்து சென்றபோது, 35 வயதான இரு பிள்ளைகளுக்கு தந்தையான நபர் சிறுமியுடன் பழகியிருந்த நிலையில் சிறுமியும் அந்த நபருடன் பேசிப் பழகியுள்ளார்.
இதனையடுத்து அநுராதபுரத்துக்கு தப்பிச் சென்று கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியை தேடிய பெற்றோர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
அதன் பின் கொச்சிக்கடை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடுத்த விசாரணைகளின் மூலம் சந்தேகநபர் அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிவான் முன் முன்னிலைப்படு த்தப்பட்டு அடுத்து எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் திகதிவரை விளக்கமறிய லில் தடுத்து வைக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.