Breaking News

11 வயது சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய வாலிபன்

கொழும்பு – கொச்சிக்கடை  ஏத்கால பகுதியில் சிறுமி ஒருவ­ரை அநு­ரா­த­பு­ரத்­துக்கு அழைத்துச் சென்று மனை­வி­யாக்கி அவ­ருடன் ஒன்­றாக வசித்­து ­வந்த நப­ர் ஒரு­வரை கொச்­சிக்­கடை பொலிஸ் நிலைய குற்றப் புல­னாய்வு பிரி­வினர் கண்டு பிடித்துள்ளனர். 

கொச்­சிக்­கடை- ஏத்­கால பிர­தே­சத்தைச் சேர்ந்த கட்­டு­மான நிறு­வ­ன­மொன்றில் உயர் பதவியில் பணி­யாற்­றி­ய சந்­தே­க­நபர் சிறு­மியை பெற்­றோ­ருக்குத் தெரி­யாமல் கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

11 வயதுடைய  சிறுமி அடிக்­கடி உத­வி­க­ளுக்­காக அத்­தொ­ழிற்­சா­லைக்கு வந்து சென்ற­போது, 35 வயதான இரு பிள்­ளை­க­ளுக்கு தந்­தை­யான  நபர் சிறு­மி­யுடன் பழ­கி­யி­ருந்த நிலையில் சிறு­மியும் அந்த ­ந­ப­ருடன் பேசிப் பழகியுள்ளார். 

இதனையடுத்து அநு­ரா­த­பு­ரத்­துக்கு தப்பிச் சென்று கணவன் மனை­வி­யாக வாழ்ந்து வந்­துள்­ள­தாக தெரி­விக்கப்படுகின்றது. சிறுமியை தேடிய பெற்றோர் கொச்­சிக்­கடை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு கொடுத்துள்ளனர்.  

அதன் பின் கொச்­சிக்­கடை பொலிஸ் நிலைய குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் தொடுத்த விசா­ர­ணை­களின் மூலம் சந்­தே­க­நபர் அநு­ரா­த­பு­ரத்தில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிவான் முன் முன்னிலைப்படு த்தப்பட்டு அடுத்து எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் திகதிவரை விளக்கமறிய லில் தடுத்து வைக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.