Breaking News

அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் – ஐரோப்பிய ஒன்றியம் கவலை!

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக சிறிலங்கா அரசாங்கம் வழங்கியிரு ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவ தில் சில விடயங்களில் சிறிய முன்னேற்றங்களே காண்பதாக ஐரோ ப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்து ள்ளது. 

அதேவேளை, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆற்றல் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளதெனவும், ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கையுடன் உள்ளனர்.   சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் நடந்த சந்திப்பின் போது, ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ்ரோஸ் ஸ்ரைலி யனிடெஸ் இக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

பிரசெல்சிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இச் சந்திப்பில் சிறிலங்காவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொரு ளாதார விவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும், வெளிவிவகார மற்று ம் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதி நிதியான பெடெரிக்கா மொக்ஹேரினியும் கலந்தனர்.  

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முக்கியமான முன்னேற்றங்கள் குறி த்து ஐரோப்பிய ஆணையாளர் இச் சந்திப்பின் வரவேற்பை நிகழ்த்தியு ள்ளார். 


இவ்வேளை, அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப சட்டரீதியாக மனித உரி மைகள் தரத்தை உயர்த்துவது மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. 



மனித உரிமைகளை மதிப்பதிலும், அனைத்துலக கடப்பாடுகளை செய ற்படுத்துவதிலும் சிறிலங்கா அரசா ங்கம் உறுதியுடன் உள்ளதாக, இச் சந்திப்பில்  திலக் மாரப்பன வாக்களி த்துள்ளார்.