Breaking News

சுதந்திரக் கட்சிக்குள் சிறிசேனவின் ஆர்ப்பாட்டம் !

உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவு ள்ளதுடன் சிறிலங்கா அதிபர் மைத்தி ரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற தனது பதவியை மே லும் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை மேற்கொண்டு ள்ளார்.  கடந்த வியாழன் பிற்பகல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமை ச்சர்களுடன் மைத்திரிபால சிறிசேன தனித்தனியாக பேச்சுவார்த்தைகளைத் தொடுத்துள்ளார்.  இக்கலந்துரையாடல் காலியிலுள்ள கலுவெல்ல சினமன் ஹில்டொப் விடுதியில் நடைபெற்றதுடன், இச் சந்திப்பிற்கு அறிக்கையா ளர்களோ, செயலர்களோ அல்லது அதிகாரிகளோ வரவழைக்கப்படவில்லை.

அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியும், ஊடகவியலாளரும் சட்டவாளருமான சிறிலங்காவில் பௌத்த மறுமலர்ச்சி அமைப்பிற்கு வித்திட்டவருமான கேணல் கென்றி ஸ்ரீல் ஒல்கொற் சிறிலங்காவில் வசித்த கீழ்த்தள அறையில் இருந்தவாறே அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் பங்கேற்றுள்ளார். 

வியாழன் இரவு 7 மணியளவில் இச் சந்திப்பு தொடங்கியதுடன் மைத்திரிபால சிறிசேன தனது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒவ்வொருவராக அழை த்து கலந்துரையாடலை தொடுத்துள்ளார். 

இச் சந்திப்பில் கலந்த சிறிலங்கா சுத ந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தே ர்தல் பிரச்சினைகள், எதிர்காலத்தில் தமது கட்சியின் சார்பாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் ஏற்படும் இடர்கள் தொடர்பாக அதிபர் மைத்திரி பால சிறிசேனவிடம் எடுத்துரைத்து ள்ளார்கள். 

இவ்வாறான சந்திப்பை பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் செயற்படுத்து வதென திட்டமிட்டுள்ளதாக சிறிசேன தனது கட்சியின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டதுடன்  இச் சந்திப்பானது நள்ளிரவு 11 மணி வரை நீடித்துள்ளது. 

மீண்டும் மறுநாள் காலை 10 மணி வரை சிறிசேன தனது கட்சி உறுப்பி னர்களை தனித்தனியாகச் சந்தித்து ள்ளார். இதன் பின்னர் சிறிசேன உல ங்குவானூர்தி மூலம் பொலன்னறு வை நோக்கிப் பறந்துள்ளார்.   

பபொலன்னறுவை, கதுறுவெல பிரதே சத்தி 
ல் மும்மொழி தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல்லை அதிபர் சிறி சேன ஆரம்பித்து வைத்துள்ளார். இந் நிக ழ்வில் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கு ம் இந்தியாவின் உயர் ஆணையாளர் தர ன்ஜித் சிங் சந்துவும் கலந்து சிறப்பித்து ள்ளார். 

இதேவேளை கலுவெல்ல சினமன் ஹில்டொப் விடுதியில் ஒன்று கூடியிருந்த சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மதிய உணவு இடை வேளை வரை செயலமர்வில் கலந்துள்ளனர். 

இச் செயலமர்வில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பாக வும் இதில் சுதந்திரக் கட்சிக்கான வாக்குகளை எவ்வாறு பலப்படுத்துவதென கலந்தாலோசித்துள்ளனர். 

பல்வேறு தேர்தல் தொகுதிகளிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவ லகங்களைத் ஆரம்பிப்பது தொடர்பாகவும் கட்சி உறுப்புரிமையை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. 

உண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான ஒரு சவாலான பணியாகும்
என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது தன்னுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமல்லாது மகிந்த ராஜபக்சவின் ஆதரவுக் கட்சியான சிறிலங்கா பொதுசன முன்னணியையும் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட வேண்டிய நிலையிலுள்ளது. 

பொதுஜன முன்னணியில் மகிந்தவிற்கு விசுவாசமானவர்களும் முன்னர் சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்தவர்களுமே உறுப்பினர்களாகவும் சிறில ங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளியன்று தனது தேர்தல் தொகுதியான பொலன்னறுவைக்குப் பயணம் செய்த போது வட மத்திய மாகாண சபையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் 13 உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி ராஜபக்ச தலைமையிலான சிறில ங்கா பொதுசன முன்னணியில் இணைந்துள்ளனர்.  

இவ்வாறான கட்சித் தாவல்கள் நடைபெறலாமென்ற சந்தேகத்தின் கார ணமாகவே மூன்று மாகாண சபைத் தேர்தல்களை சிறிசேன பின்தள்ளி யுள்ளார்.  இதில் வடமத்திய மாகாணமும் ஒன்றாகும். 

சிறிசேனவின் தேர்தல் தொகுதியான பொலன்னறுவை உள்ளடங்கியுள்ள வடமத்திய மாகாண சபையின் காலப்பகுதி செப்ரெம்பர் 30ல் முடிவடைந்து ள்ளது. இதேபோன்று சப்ரகமுவ மாகாண சபையின் காலப்பகுதியானது செப்ரெம்பர் 26 இலும் கிழக்கு மாகாண சபையின் காலப்பகுதி ஒக்ரோபர் 01 உடன் முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில் இவ் மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் அதிபர் சிறிசேன பிற்போட்டுள்ளார். சிறிசேனவிற்கு எதிராக கடந்த சில மாதங்களாக அவரது வட்டாரங்களிலிருந்து மிகப் பலமான பிரசன்னங்கள் வெளியாகி யுள்ளன.

குறிப்பாக சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக நடப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மிக முக்கிய பொருளாதார மற்றும் சமூக சேவைப் பொறுப்புக்களை வழங்கிய தால் தமது வாக்காளர்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இப்படியொரு விமர்சனத்தை முன்வைத்த அமைச்சர்களில் ஒருவரான சுசில் பிறேமஜயந்த வெளிநாட்டிற்குச் சென்றதால் காலியில் நடைபெற்ற சிறில ங்கா சுதந்திரக் கட்சியின் சந்திப்பில் பங்குபற்ற முடியவில்லை. 

சிறிலங்கா அதிபர் ஐ.தே.க சார்பாகச் செயற்படுவதாக விமர்சனம் செய்த நாடா ளுமன்ற உறுப்பினர்களான டுலிப் விஜயசேகர மற்றும் சுசந்த புன்சிநிலமே போன்றோர் காலிச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். 

விமர்சனங்களை முன்வைத்த சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலா ன் பெரேரா ஆகியோர் காலிச் சந்திப்பி ல் கலந்து கொள்ளவில்லை. 

காலிக் கலந்துரையாடலுக்குச் சென்ற போதும் அதிபர் சிறிசேனவுடன் தனி யான சந்திப்பை மேற்கொள்ளாத அமைச்சர்களில் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, துமிந்த திசநாயக்க மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் குறிப்பிடப்படுவர்.

தாங்கள் அதிபர் சிறிசேனவுடன் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்வதால் அதிபருடன் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளனர். 

இவ் அடிப்படையில், மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான திருத்தச் சட்ட வாக்களிப்பிலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றவில்லை. 

வாக்கெடுப்பு செயற்படுத்தப்பட்ட பின்னரே, காலியில் அதிபர் மைத்திரி பால சிறிசேன தனது கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறு ப்பினர்களைத் தனித்தனியாகச் சந்தி த்துள்ளார். 

இதன் மூலம் கட்சிக்குள் உள்ள வேறு பாடுகளையும் முரண்பாடுகளையும் கலந்து கொள்ள முடியும் என்கின்ற நம்பிக்கையிலேயே இச்சந்திப்பை சிறிசேன நடாத்தியுள்ளார். 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் சுயேட்சை என்ற பெயரில் எதிர்க்கட்சியில்  அமர்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்ற சந்தேகத்தின் பேரில் இதனை முறியடிப்பதற்காகவும் சிறிசேனவால் இத்தனிச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் வருடாந்த காலிக் கலந்துரையாடலில் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளது டன் இது தொடர்பாக சிறிசேனவினால் காலிக் கலந்துரையாடல் எடுத்து ரைக்கப்படவில்லை. 

மேலும் சிறிசேனவின் காலிக் கலந்துரையாடலானது நடைபெறவுள்ள தேர்த ல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளைப் பலப்படுத்துதல் மற்று ம் கட்சிக்காக புதிய தேர்தல் ஒழுங்குபடுத்துனர்களை தெரிவு செய்தல் தொட ர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மேலும் இளைஞர்களை உள்வாங்குவதற்கான பணிகளில் சிறிசேன ஈடுபட்டுள்ளார். தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படாத உறுப்பினர்களை அதிலிருந்து விலக்குவது தொட ர்பான முக்கிய தீர்மானம் ஒன்றை சிறிசேன குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான உறுப்பினர்கள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமான நடவடி க்கைகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்துவதற்கான காணொலிகளைச் சேக ரிப்பதற்கான காணொலிக் கருவிகளும் தற்போது நடைமுறைப்படுத்தப்ப ட்டுள்ளன.

கடந்த வியாழன் இரவு காலி சினமன் ஹில்டொப் விடுதியை வந்தடைந்த சிறிசேன அங்கு சுருக்கமான பேச்சைத் தொடுத்திருந்தார். 

பேச்சில் ‘ஐ.நா பொதுச் சபையின் 72வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பின்னர் நான் நாடு திரும்பிய போது இந்தியப் பத்திரிகையொன்றில் கிடைத்த செய்தியில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பி டப்பட்டிருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது சிறிலங்காவில் பொருளாதாரம் சிறப்பாகக் காணப்படுகிறது. 

ஆகவே எமது நாட்டின் பொருளாதாரமானது மேலும் வளர்ச்சியடைவதை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்’ எனக் தெரியப்படுத்தியுள்ளார்.