Breaking News

வடக்கு ஸ்தம்பிதம் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை முற்றாக பாதிப்பு

(எம்.நியூட்டன்,கே.குமணன்,கரைச்சி, கண்­டா­வளை,ஓமந்தை,வவு­னியா, தலை­மன்னார் நிரு­பர்கள்) 

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொ டர் உண்­ணா­வி­ரதப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் தமிழ் அர­சியல் கை தி­களின் கோரிக்­கைகள் நிறை­வேற்­ற ப்­பட வேண்டும், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு நாட­ளா­விய சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுக்­கப்­ப­ட­வேண்டும் ஆகிய கோரிக்­கை­களை அழுத்­த­மாக வலி­யு­றுத்தி வடக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. வட­மா­கா­ண­த்தைச் சேர்ந்த அர­சியல் கட்­சிகள், தொழிற்­சங்­கங்கள், சிவில் அமைப்­புக்கள், பொது அமைப்­புக்கள், மத அமைப்­புக்கள் உட்­பட சகல தரப்­பி­னரும் எவ்­வித பேத­மின்றி வழங்­கிய முழு­மை­யான ஒத்­து­ழைப்பால் வட­மா­காணம் நேற்று வெள்ளிக்­கி­ழமை ஸ்தம்­பித்­தது. 

முன்­ன­தாக அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி நேற்று வட­மா­காணம் முழு­வதும் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என பல்­வேறு தரப்­பி­னரும் கோரிக்கை விடுத்­தி­ருந்த நிலையில் வடக்கில் அர­சியல் கட்­சிகள் உட்­பட 19 அமைப்­புக்­களும் 

வவு­னியா மாவட்­டத்­தினைச் சேர்ந்த 17அமைப்­புக்­களும் மன்னார் மாவட்ட பொது அமைப்­புக்­களின் ஒன்­றியம், வட­மா­காண காண­மல்­போ­னோரின் உற­வி­னர்­களின் ஒன்­றியம், வட­மா­கா­ண த்தின் ஐந்து மாவட்­டங்­களின் பிர­ஜைகள் குழுக்கள், 

தனியார் போக்­கு­வ­ரத்து சங்­கங்கள், கம­நல அமைப்­புக்கள், ஐந்து மாவட்­டங்­களின் தமிழ், முஸ்லிம் வர்த்­தக சமூ­கத்­தினர், மீனவ அமைப்­புக்கள் உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் ஆத­ரவை வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்­தனர். 

 யாழ்.மாவட்டம் 

இந்­நி­லையில் அதி­காலை முதலே பர­ப­ரப்­பாகும் யாழ்.நகரம், உள்­ளிட்ட யாழ்.மாவட்­டத்தின் பிர­தான நக­ரங்கள் அனைத்தும் நேற்று வெள்ளிக்­கி­ழமை அதி­காலை முதலே ஆள்­ந­ட­மாட்டம் அற்ற நிலையில் வெறிச்­சோடிக் காணப்­பட்­டன. யாழ்.­மா­வட்­டத்தின் வட­மா­ராட்சி, தென்­ம­ராட்சி, தீவகம் ஆகி­ய­வ ற்றின் முக்­கிய நக­ரங்­களில் உள்ள அனைத்து வர்த்­தக நிலை­யங்­களும் மூடப்­பட்­டி­ருந்­தன. 

யாழ்.மாவட்­டத்தில் பிர­தான சந்­தை­களும் இயங்­கி­யி­ருக்­க­வில்லை. யாழிற்குள் பிர­வே­சிக்கும் நெடுந்­தூர பய­ணிகள் பஸ் வண்­டிகள் மட்­டுமே சேவையில் ஈடுபட்டன. யாழி­லி­ருந்து ஏனைய பகு­தி­க­ளுக்கோ அல்­லது வெளிமா­வட்­டங்­க­ளுக்கோ எந்­த­வொரு அரச, தனியார் போக்­கு­வ­ரத்து சேவைகளும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. 

 பாட­சா­லை­களில் பல மூடப்­பட்­டி­ருந்த நிலையில் சில கிரா­மப்­புற பாட­சா­லை­களில் மாண­வர்­களின் வருகை குறை­வாக இருந்­தது. எனினும் நண்­ப­க­லா­கின்ற போது அனைத்து பாட­சா­லை­களும் முழு­மை­யாக மூடப்­பட்­டி­ருந்­தன.

அத்­தி­யாவ­சிய தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக மருந்­த­கங்கள் பகு­தி­ய­ளவில் மாத்­திரம் இயங்­கி­ய­தோடு எரி­பொருள் நிரப்பு நிலை­யங்கள், உண­வங்கள் உள்­ளிட்ட எவையும் திறக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. 

மாவட்ட, பிர­தேச செய­ல­கங்கள், அரச நிறு­வ­னங்கள், திணைக்­க­ளங்கள் உள்­ளிட்­ட­வற்றின் பிர­தான வாயில்கள் அனைத்தும் பூட்­டப்­பட்டு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளினால் பாது­காப்பு தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. 

இதே­நேரம் யாழ்.­மா­வட்­டத்தின் கரை­யோரக் கிர­மங்­களில் உள்ள மீன­வர்கள் கட­லுக்குச் செல்­வதை தவிர்த்­தி­ருந்­த­தோடு சந்­தைப்­ப­டுத்தல் செயற்­பா­டு­க­ளையும் புறக்­க­ணித்­தி­ருந்­தனர். 

யாழ்.மாவட்­டத்தின் நக­ரப்பகுதிகளிலும் ஏனைய பகு­தி­க­ளிலும் உள்ள முஸ்லிம் வியா­பார நிறு­வ­னங்­களும் மூடப்­பட்டு பூரண ஹர்த்­தாலை அனுஸ்­டிப்­ப­தற்கு ஆத­ரவு வழங்­கப்­பட்­டி­ருந்து. 

கிளி­நொச்சி மாவட்டம் 

வடக்கின் பூரண ஹர்த்­தா­லுக்கு கிளி­நொச்சி மாவட்­டமும் பூரண ஒத்­து­ழைப்பை நல்­கி­யுள்­ளது. கிளி­நொச்சி மாவட்­டத்தின் பிர­தான சந்தை தொகுதி, வர்த்­தக நிலை­யங்கள், பாட­சா­லைகள், தனியார் நிறு­வ­னங்கள் உள்­ளிட்ட எவையும் இயங்­கா­தி­ருந்­தன. 

குறிப்­பாக கிளி­நொச்சி மாவட்­டத்தின் ஊடான போக்­கு­வ­ரத்­து­களும் நடை­பெ­றாது முழு­மை­யாக ஸ்தம்­பி­த­ம­டைந்த நிலைமை காணப்­பட்­டது. 

கிளி­நொச்சி மாவட்­டத்தில் பொது அமைப்­புக்கள் அனைத்து தரப்­பி­ன­ரி­டத்­திலும் ஹர்த்­தா­லுக்­கான ஆத­ரவைக் கோரி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

வவு­னியா மாவட்டம் 

வவு­னி­யா­விலும் பூரண கடை­ய­டைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. நகரில் வர்த்­தக நிலை­யங்கள் அனைத்தும் மூடப்­பட்­டி­ருந்­த­தோடு பாட­சா­லைகள், அரச அலு­வ­ல­கங்கள், வங்­கிகள் போன்­ற­வற்றின் பணி­களும் முழு­மை­யாக பாதிப்­ப­டைந்­தி­ருந்­தன. 

யாழ். உட்­பட வவு­னி­யா­வி­லி­ருந்து வடக்கு மாகா­ணத்தின் ஏனைய மாவட்­டங்­க­ளுக்கு செல்லும் அரச, தனியார் போக்­கு­வ­ரத்து சேவைகள் இடம்­பெ­றாத கார­ணத்­தினால் பய­ணிகள் சிர­மங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். ஆயினும் வவு­னி­யாவில் இருந்து நாட்டின் தென்­ப­கு­தி­க­ளுக்­கான சேவைகள் இடம்­பெற்­றன. 

இதே­வேளை தமிழ் விருட்சம் அமைப்­பினர் அந்­தணர் ஒன்­றி­யத்­துடன் இணைந்து அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காக வவு­னியா குட்செட் வீதி கரு­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் விசேட வழி­பா­டு­களை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்கு வலுச்­சேர்க்கும் வகை­யிலும் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் வவு­னி­யாவில் தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருக்கும் காண­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் ஒரு நாள் அடை­யாள உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை முன்­னெ­டுத்­தனர். 

குறித்த உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­ட­மா­னது காலை முதல் மாலை நான்கு மணி வரையில் அந்த உற­வு­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. முல்­லைத்­தீவு மாவட்டம் 19ஆவது நாளா­கவும் உணவு தவிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வரும் அர­சியல் கைதி­களின் விடு­த­லை­யினை வலி­யு­றுத்­தியும், முன்­னெ­டுக்­க­பட்ட ஹர்த்­தா­லுக்கு முல்­லைத்­தீவு மாவட்­டமும் பூர­ண­மாக ஒத்­து­ழைப்பை வழங்­கி­யதால் அம்­மா­வட்­டத்தின் அனைத்தச் செயற்­பா­டு­களும் முடங்­கி­யது.

முல்­லைத்­தீவு மாவட்டம் 

தழு­விய ரீதியில் முழு­மை­யான கடை­ய­டைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் அரச ,தனியார் போக்­கு­வ­ரத்­துக்­களும் நிறுத்­தப்­பட்டு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கப்­பட்­டது. முல்­லைத்­தீ­வு ­ந­கரம், முள்­ளி­ய­வளை,புதுக்­கு­டி­யி­ருப்­பு­ஒட்­டி­சுட்டான், மாங்­குளம்,மல்­லாவி துணுக்காய் விசு­வ­மடு,பாண்­டி­யன்­குளம் போன்ற பிர­தே­சங்­களில் வணிக நிலை­யங்கள் முழு­மை­யாக மூடப்­பட்டு போராட்­டத்­திற்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கப்­பட்­டது. 

முல்­லைத்­தீவு மாவட்ட தனியார் பேருந்து உரி­மை­யாளர் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பனவும் சேவைகளை இடைநிறுத்தி ஹர்த்தாலுக்கு ஆத­ரவு வழங்­கி­யிருந்தன. 

 மன்னார் மாவட்டம் 

அர­சியல் கைதி­க­ளுக்­கான பூரண ஹர்த்தால் மன்னார் மாவட்­டத்­திலும் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக மன்னார் பகு­தியில் ஒரு சில உண­வ­கங்கள் தவிர்ந்த பெரும்­பா­லான வர்த்­தக நிலை­யங்கள் மூடப்­பட்டு காணப்­பட்டன. பாட­சாலை மாண­வர்கள் பாட­சா­லை­க­ளுக்கு செல்­லா­த­தி­னதால் பாசா­லைகள் வெறிச்­சோடிக் காணப்­பட்­டன. 

அத்­துடன் தனியார் மற்றும் இலங்கை போக்­கு­வ­ரத்து சபை போக்­கு­வ­ரத்­துச் சேவையும் ஸ்தம்­பித நிலையை அடைந்­தி­ருந்­தன. காலையில் மன்­னா­ரி­லி­ருந்து கொழும்­புக்கு சென்ற இ.போ.ச பஸ் வண்டி ஒன்று தாக்­கு­த­லுக்கு உள்ளா ன சம்பவம் மன்னனாரில் இடம் பெற்றதாகதத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அது தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதிவாகவில்லை. 

அரச திணைக்களங்கள் வழமைப் போன்று இயங்கியபோதும் பொது மக்கள் எவரும்அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சென்றிருக்கவில்லை. கடற்தொழிலாளர்கள், அன்றாடம் கூலிக்குச் செல்பவர்களும் வீட்டுடன் முட ங்கியிருந்தனர். 

அழைப்பு விடுத்த அமைப்புக்கள் நன்றி 

 வடமாகாணத்தின் அனைத்து தரப்பி னரின் பூரணமான ஒத்துழைப்புக்களுடன் அரசியல் கைதிகளுக்கான பூரண ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. 

இதற்காக தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த அனைத்து தரப்பினரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

மீண்டும் ஆரம்பமான போக்குவரத்து சேவைகள் 

இதேவேளை ஹர்த்தாலை யடுத்து நேற்று இரவு முதல் வடமாகாணத்திலிருந்து வௌிமாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்த க்கது.