Breaking News

காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு விட்டுக்கொடுக்க முடியாது – இரா.சம்பந்தன்!

புதிய அரசியலமைப்பில் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான காணி, சம்மந்தமான பொலிஸ் நிபந்த னைகள் எதற்கும் இடமளிக்கமளிக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மன்னார் ஆயரிடம் குறிப்பிட்டுள்ளாா்   

தமிழ் மக்களின் நிரந்தரத் தீர்வை அமைப்பதற்காக அரசியல் யாப்பி னை உதாசீனம் செய்யமுடியாதென நேற்று முன்தினம் மன்னார் ஆயர் இல்லத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து ஆசீ வேண்டிய வேளை மேற்குறிப்பிட்டவாறு  எச்சரி த்துள்ளார்.  

மேலும், ஆயருடனான சந்திப்பில், தற்கால அரசியல் நிலமை சார்பாக ஆயருடன் ஆலோசித்துள்ளதுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் மன்னார்மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை யினையும் சந்தித்து புதிய அரசியலமைப்பு தொடர்பாக கலந்துரையாடியுள்ள னர்.  


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினர் சா ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வ ர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோ சை ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ள னர்.