Breaking News

தமிழகத்தில் சாதிய-மதவாத சக்திகள் தடம்பதிக்க எத்தனிக்கின்றன !- திருமாவளவன்

சாதி - மதவாத சக்திகள் தமிழகத்தில் தடம்பதிக்க  எத்தனிக்கின்றன அதனை தடுப்பது ஜனநாயக சக்தியின் பொறுப்பென  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நேற்று (29) நிருபர்களி டம் :- 

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு உருவாக்கியதே தமிழக அரசு தான். ஆனால் தற்போது கிரானைட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லையென  உயர் நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் பதில் மனுத் தாக்கல் அளித்தமை எப்படியென்று தெரியவில்லை. 

இது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும். விடுதலை சிறுத்தை கட்சியினர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. கரூர், மயிலாடுதுறை யில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்.

 மத்திய அரசுதான் தமிழகத்திற்கு சர்க்கரை வழங்குகிறது. இதனால் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய அரசும் ஒரு காரணம். விலை உயர்வை ரத்து செய்ய முதல் - அமைச்சர் எடப்பாடி பழனி சாமி நடவடிக்கையெடுக்க வேண்டும்.   

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு தமிழகத்தில் ஒரு குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. பா.ஜனதா-அ.தி.மு.க. இடையே சாதகமான சூழ் நிலை நிலவி வருகிறது. 

சாதிய -மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற பார்க்கின்றன. அதனை தடுப்பது ஜனநாயக சக்தியின் கடமை. பல்வேறு சமூக தலைவர்களுடன் பேசி பா.ஜனதா தன்மயப்படுத்தியுள்ளது. 

அதில் பல தலித் அமைப்புகள், சமுதாய அமைப்புகள் பா. ஜனதா பக்கம் சென்றுள்ளது உண்மைதான். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியை குறை த்து கணிப்பிட முடியாது. 

எப்போதும் தனித்துவமாக செயல்படும். மது, ஊழலை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது போல் கந்து வட்டியையும் ஒழிக்க குரல் கொடுக்க வேண்டும். கந்து வட்டிக்கு எதிராக நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறும். 

வருகிற 3-ந்திகதி ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அது குறித்து முடிவு செய்யப்படும். பண மதிப்பிழப்பு நாளான நவம் பர் 8-ந்திகதியை கருப்பு தினமாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பிலும் அனுசரிக்கப்படும். 

தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.