Breaking News

உயர்ந்த மட்­டத்­தி­லான அவ­தா­னிப்­புக்­களை இலங்­கையில் முன்­னெ­டுக்க முயற்­சிப்பேன்

ஐ.நா.விசேட நிபுணர் யாழ்ப்­பா­ணத்தில் தெரி­விப்பு. 

எனது விஜ­யத்தின் போது அர­சாங்­கத்­த­ரப்பு, சிவில் சமூக தரப்பு உள்­ளிட்ட அனை­வ­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளேன். நான் எனது விஜ­யத்தின் போது உயர்ந்த மட்­டத்­தி­லான அவ­தா­னிப்­புக்­களை செய்­வ­தற்கு முயற்­சி ப்பேன். நம்­பிக்கை என்­பது இங்கு மிக வும் முக்­கி­ய­மா­னது. நம்­பிக்கை நல்­லி­ணக்­கத்தில் பல வழி­களில் செயற்­ப­டு­கின்­றது என்று இலங்கை வந்­துள்ள உண்மை நீதி நட்­ட­ஈடு மற்றும் மீள்­நி­க­ழாமை தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட பிர­தி­நிதி பப்லு டி கிரிப் தெரி­வித்தார். யாழ்ப்­பா­ணத்தில் நேற்று நடை­பெற்ற கருத்­த­ரங்கு ஒன்றில் கலந்­து­கொண்டு அங்கு எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் மோதல் நிக­ழாமை ஆகிய கார­ணிகள் ஒன்­றுக்­கொன்று ஒத்­து­ழைப்பு வழ ங்கும் வகையில் அமைந்­தி­ருக்­கின்­றன. இந்த விட­யத்தில் சிவில் சமூ­கத்தை ஒரு வள­மாக பயன்­ப­டுத்­த­வேண்டும். 

அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வ­ரும்­நோக்கில் சிவில் சமூகம் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அத்­துடன் நிலை­மா­று­கால நீதி தொடர்­பான அடிப்­படை விட­யங்கள் நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் தேவை­யா­ன­தாகும் எனது விஜ­யத்தின் போது அர­சாங்­கத்­த­ரப்பு, சிவில் சமூக தரப்பு உள்­ளிட்ட அனை­வ­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளேன். 

நான் எனது விஜ­யத்தின் போது உயர்ந்த மட்­டத்­தி­லான அவ­தா­னிப்­புக்­களை செய்­வ­தற்கு முயற்­சிப்பேன். நம்­பிக்கை என்­பது இங்கு மிகவும் முக்­கி­ய­மா­னது. நம்­பிக்கை நல்­லி­ணக்­கத்தில் பல வழி­களில் செயற்­ப­டு­கின்­றது. 

நான் கடந்த முறை ஐக்­கி­ய­நா­டுகள் பொதுச்­ச­பைக்கும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வைக்கும் இரண்டு அறிக்­கை­களை தாக்கல் செய்­தி­ருந்தேன். இம்­முறை நியூயோர்க் திரும்­பி­யதும் ஐ.நா. பொதுச்­ச­பைக்கு மற்­று­மொரு அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளேன். 

நீதி மறைக்­கப்­ப­டவோ, தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டவோ முடி­யாது. நிலை­மா­று­கால நீதி­யா­னது தோல்­வியை உரு­வாக்கும். தீர்­மானம் எடுத்தல், போன்­ற­வற்றில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். நான் இங்­குள்ள நிலை­மை­களை அவ­தா­னிப்­ப­தற்­காக அழைக்­கப்­பட்­டுள்ளேன். 

அடுத்­த­ வாரம் கொழும்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­திப்பேன் அதன்­போது இங்கு எழுப்­பப்­பட்ட பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்பேன். வேறு­பட்ட நாடு­களில் வேறு­பட்ட வித­மான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. 

விசேட அறிக்­கை­யா­ளர்கள் என்­ப­வர்கள் ஐக்­கி­ய­நா­டுகள் சபையின் உத்­தி­யோ­கத்­தர்கள் அல்ல. விசேட அறிக்­கை­யா­ளர்கள் எப்­போதும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வைக்கும், ஐக்­கி­ய­நா­டுகள் பொதுசபைக்கும் அறிக்கையிடு வதற்கு மட்டுமே ஆணையைக் கொண்டுள்ளார்கள். 

இலங்கையின் இந்த நல்லிணக்க பொறிமுறை செயற்பாட்டில் ஐக்கியநாடுகள் சபை ஒரு முக்கியமானதொரு வகிபாகத்தை கொண்டுள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களில் நான் சில தடவைகள் இங்கு வந்திருக்கின்றேன். நான் எனது கடமையை தொடர்ந்து முன்னெடுப்பேன்.