உயர்ந்த மட்டத்திலான அவதானிப்புக்களை இலங்கையில் முன்னெடுக்க முயற்சிப்பேன்
ஐ.நா.விசேட நிபுணர் யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு.
எனது விஜயத்தின் போது அரசாங்கத்தரப்பு, சிவில் சமூக தரப்பு உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். நான் எனது விஜயத்தின் போது உயர்ந்த மட்டத்திலான அவதானிப்புக்களை செய்வதற்கு முயற்சி ப்பேன். நம்பிக்கை என்பது இங்கு மிக வும் முக்கியமானது. நம்பிக்கை நல்லிணக்கத்தில் பல வழிகளில் செயற்படுகின்றது என்று இலங்கை வந்துள்ள உண்மை நீதி நட்டஈடு மற்றும் மீள்நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பப்லு டி கிரிப் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் மோதல் நிகழாமை ஆகிய காரணிகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு வழ ங்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த விடயத்தில் சிவில் சமூகத்தை ஒரு வளமாக பயன்படுத்தவேண்டும்.
அரசாங்கம் பொறுப்புக்கூறல் பொறிமுறை சட்டமூலத்தை கொண்டுவரும்நோக்கில் சிவில் சமூகம் செயற்படவேண்டியது அவசியமாகும். அத்துடன் நிலைமாறுகால நீதி தொடர்பான அடிப்படை விடயங்கள் நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியம் தேவையானதாகும்
எனது விஜயத்தின் போது அரசாங்கத்தரப்பு, சிவில் சமூக தரப்பு உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன்.
நான் எனது விஜயத்தின் போது உயர்ந்த மட்டத்திலான அவதானிப்புக்களை செய்வதற்கு முயற்சிப்பேன். நம்பிக்கை என்பது இங்கு மிகவும் முக்கியமானது. நம்பிக்கை நல்லிணக்கத்தில் பல வழிகளில் செயற்படுகின்றது.
நான் கடந்த முறை ஐக்கியநாடுகள் பொதுச்சபைக்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் இரண்டு அறிக்கைகளை தாக்கல் செய்திருந்தேன். இம்முறை நியூயோர்க் திரும்பியதும் ஐ.நா. பொதுச்சபைக்கு மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளேன்.
நீதி மறைக்கப்படவோ, தனிமைப்படுத்தப்படவோ முடியாது. நிலைமாறுகால நீதியானது தோல்வியை உருவாக்கும். தீர்மானம் எடுத்தல், போன்றவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் இங்குள்ள நிலைமைகளை அவதானிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளேன்.
அடுத்த வாரம் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திப்பேன் அதன்போது இங்கு எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பேன். வேறுபட்ட நாடுகளில் வேறுபட்ட விதமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
விசேட அறிக்கையாளர்கள் என்பவர்கள் ஐக்கியநாடுகள் சபையின் உத்தியோகத்தர்கள் அல்ல. விசேட அறிக்கையாளர்கள் எப்போதும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும், ஐக்கியநாடுகள் பொதுசபைக்கும் அறிக்கையிடு வதற்கு மட்டுமே ஆணையைக் கொண்டுள்ளார்கள்.
இலங்கையின் இந்த நல்லிணக்க பொறிமுறை செயற்பாட்டில் ஐக்கியநாடுகள் சபை ஒரு முக்கியமானதொரு வகிபாகத்தை கொண்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் நான் சில தடவைகள் இங்கு வந்திருக்கின்றேன். நான் எனது கடமையை தொடர்ந்து முன்னெடுப்பேன்.








