Breaking News

மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்­டங்­களில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கைச்­சாத்து

திகதியை தீர்மானிக்க அடுத்தவாரம் கூடுகின்றது ஆணைக்குழு 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லுடன் தொடர்­பு­டைய மாந­க­ர­சபை, நகர சபை, பிர­தேச சபை ஆகி­ய­வற்­றுக்­கான தேர்தல் திருத்தச் சட்­டங்­களில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கைச்­சாத்­திட்­டுள்ளார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை சபா­நா­யகர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற நிகழ்வில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய மேற்­கண்ட சட்­டங்­களில் கையொப்பம் இட்டார். சபா­நா­யகர் கையொப்பம் இட்­ட­வே­ளையில் மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் பாரா­ளு­மன்ற செய­லாளர் தம்­மிக தச­நா­யக்க உள்­ளிட்ட அதி­கா­ரிகள் பலர் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர். 

கடந்த திங்கட் கிழமை நடை­பெற்ற விசேட பாரா­ளு­மன்ற அமர்வின் போது மாநா­கர, நகர, மற்றும் பிர­தேச சபை­க­ளுக்­கான தேர்தல் திருத்­தச்­சட்­டங்கள் திருத்­தங்­க­ளுடன் வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன. 

குறித்த கையொப்பம் இடும் நிகழ்­வினை அடுத்து சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய ஊட­கங்­க­ளுக்கு கருத்து வௌியி­டு­கையில், உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் சட்­டங்கள் திருத்­தப்­பட்­டமை இலங்கை அர­சியல் வர­லாற்றில் பொன்­னெ­ழுத்­துக்­களால் பொறிக்­கப்­பட வேண்­டிய சந்­தர்ப்­ப­மாகும். 

உள்­ளுா­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லுக்­கு­ரிய எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்டு தொகு­திகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான பெண்கள் பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. 

மாந­கர, நகர, பிர­தேச சபை­க­ளுக்­கான சட்­டங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தோடு உள்­ளுா­ராட்சி தேர்­தலை நடத்­து­வதில் காணப்­பட்ட சகல தடை­களும் நீங்­கி­யுள்­ளன. 

இந்த சட்­டங்­களில் கையெ­ழுத்­திட முன்னர் நான் தேர்தல் ஆணைக்­குழு தலை­வ­ரு­டனும் எல்லை நிர்­ணய தலை­வ­ரு­டனும் கலந்­து­ரை­யா­டினேன்.

அடுத்த ஜன­வ­ரியில் தேர்தல் நடத்­து­வ­தற்­கான சந்­தர்ப்பம் இருப்­ப­தாக அவர்கள் எனக்கு தெரி­வித்­துள்­ளார்கள் என்றார் இதே­வேளை இங்கு கருத்து வௌியிட்ட மாகாண சபைகள் உள்­ளுா­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா, தேர்தல் முறையை மாற்­றுதல், விருப்பு வாக்கு முறையை மாற்­றுதல் என்­பன இலங்கை அர­சியல் வர­லாற்றில் மிகவும் பாரிய மாற்­றங்­க­ளாகும். 

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தேர்­தல்கள் முறைமை மாற்றம் தொடர்பில் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. கடந்த காலங்­களில் இடம்­பெற்ற தவ­று­க­ளினால் எனக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேரிட்­டது. 

தேர்தல் சட்ட திருத்­தத்­திற்கு அமை­வாக உள்­ளுா­ராட்சி சபை உறுப்­பி­னர்­களின் தொகையை மாற்ற எதிர்­பார்க்­கிறோம். உள்­ளுா­ராட்சி தேர்­தலை ஜன­வரி மாதத்­திலும் மாகாண சபை தேர்­தலை மார்ச் மாதத்­திலும் நடத்த திட்­ட­மிட்­டுள்ளோம். 

 இந்த சட்­டத்­துடன் தொடர்­புள்ள குறிப்­பாக உறுப்­பினர் தொகை போன்ற விட­யங்கள் தொடர்­பாக நாளை(இன்று) வௌ்ளிகி­ழமை தேர்தல் ஆணைக்­குழு தலை­வரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளேன். 

தேர்­தலில் முழுக் குடும்­பமும் போட்­டி­யிடும் நிலை மாற வேண்டும். அர­சி­யிலில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களின் குடும்­பத்­தி­னரே அதி­க­மாக தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றனர். இந்த நிலையை மாற்­றி­ய­மைக்க வேண்டும். 

குடும்­பத்­திற்கு ஒருவர் என்ற தொனிப் பொருளின் கீழ் அர­சியல் நடத்த வேண்டும். நாட்டில் 22 மில்­லியன் பேர் உள்­ளனர். இதி­லி­ருந்து தகு­தி­யா­ன­வர்­களை தெரிவு செய்ய முடியும். 

குடும்ப அர­சி­ய­லுக்குப் பதி­லாக கிராம சங்­கங்கள் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு வாய்ப்பு வழங்­கப்­பட வேண்டும். தற்­பொ­ழுது 23 மாந­கர சபைகள் இருக்­கின்­றன. அம்­ப­க­முவ நுவ­ரெ­லியா பிர­தேச சபை­களின் அள­வுக்­கேற்ப பிர­தேச சபை­க­ளாக அதனை பிரிக்க இருக்­கிறோம். 

அவ்­வி­டயம் தொடர்பில் மலை­யக கட்­சிகள் முன்­வைத்­துள்ள யோசனை குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது என்றார்.  

திக­தியை அறி­விக்க தயார் 

இதே­வேளை உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் திருத்­தச்­சட்­டங்கள் தொடர்பில் இறுதித் தடை­யா­க­வி­ருந்த மாந­கர, நகர, பிர­தேச சபை­க­ளுக்­கான தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் தொடர்­பான வர்த்­த­மான அறி­வித்தல் வௌி வந்தவுடன் தாமதமின்றி தேர்தலுக்கான திகதி அறிவிப்பைச் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவி த்துள்ளார். 

தேர்தல் ஆணைக்குழுவின் தரப்பினருடன் இன்றைய தினம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள அமைச்சர் பைசர் முஸ்தாபா அதனையடுத்து தாமத மின்றி வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்தவாரம் தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளதாக தெரியவரு கின்றது.