Breaking News

எல்லை நிர்­ணயம் குறித்து மலை­யக தமிழ் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை

தேர்தல் திருத்த சட்­ட­மூலம் செவ்­வாய்க்­கி­ழமை வர்த்­த­மா­னியில் வரும் என்­கிறார் பைசர் முஸ்­தபா 

நுவ­ரெலியா, அம்­ப­க­முவ பிர­தேச சபை­களை ஐந்து அல­கு­க­ளாக பிரிப் பது குறித்து மலை­யக தமிழ் அர­சியல் கட்­சிகள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக மாகா­ண­சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பை சர் முஸ்­தபா தெரி­வித்தார். 

மாந­கர, நகர, பிர­தேச சபைகள் தேர்த ல் திருத்த சட்­ட­மூலம் செவ்­வாய்க்­கி­ழமை வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடப்­படும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட மாந­கர, நகர, பிர­தேச சபைகள் தேர்தல் திருத்த சட்­ட­மூல பிர­தியை தேர்­தல்கள் ஆணைக்­குழு தலை­வ­ரிடம் நேற்று கைய­ளித்த மாகா­ண­சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து கூறி­கை­யி­லேயே இதனை தெரி­வித்தார். 

அவர் மேலும் கூறு­கையில், தேர்தல் நடத்­து­வதில் இறு­தி­யான செயற்­பா­டா­னது உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான உறுப்­பி­னர்­களின் மீள் பரி­சீ­ல­னை­யாகும். இது தொடர்­பி­லான சட்­ட­மூ­லத்தை இன்று தேர்தல் ஆணைக்­குழு தலை­வ­ரிடம் கைய­ளித்தோம். 

இது­வ­ரை­யாள காலம் தேர்தல் குறித்தும் எல்லை நிர்­ணய வேலைத்­திட்டம் தொடர்­பிலும் மிகவும் ஒத்­து­ழைப்­புடன் நாம் இரு தரப்­பி­னரும் செயற்­பட்­டுள்ளோம். மாகா­ண­சபை சட்­ட­மூ­லத்தில் சில முரண்­பா­டுகள் எமது இரு தரப்­பி­ன­ரி­டையில் இருந்­தன. 

எனினும் தொடர்ச்­சி­யாக தேர்­தல்கள் திணைக்­க­ளத்­துடன் கலந்­தா­லோ­சித்து ஆராய்ந்து செயற்­பட்டு வரு­கின்றோம். நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ ஆகிய பிர­தேச சபை­களில் மக்கள் தொகை இரண்டு இலட்­சத்­துக்கும் அதி­க­மாக இருப்­பதன் கார­ண­மாக இரண்டு பிர­தேச சபை­களை நான்கு அல்­லது ஐந்து பிர­தேச சபை­க­ளாக பிரிப்­ப­தற்கும் ஆரம்­பத்தில் இருந்தே கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வந்­தன. 

இந்த செயற்­பா­டுகள் குறித்து மலை­ய­கத்தின் தமிழ் அர­சியல் கட்­சி­க­ளுடன் நாம் கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம். அதே­போன்று புதுக்­கு­டி­யி­ருப்பு, கரைச்சி பிர­தேச சபைகள் தொடர்­பிலும் நாம் சட்­ட­மூலம் ஒன்றை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ளோம். 

இந்த விட­யத்­திலும் தீர்வு ஒன்­றினை பெற்­று­கொ­டுக்க வேண்­டிய கடமை எம க்கு உள்­ளது. ஆகவே அடுத்த வாரங்­களில் நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ பிர­தேச சபை­களை அதி­க­ரிக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை கையாண்டு வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடுவோம். 

நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ பிர­தேச சபைகள் விவ­காரம் தொடர்பில் அடுத்து வரும் சில தினங்­களில் நாம் மலை­யக தமிழ் கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம். அதே­போன்று நுவ­ரெ­லிய மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் நாம் கலந்துரையாடவுள்ளோம். 

புதுக்குடியிருப்பு மற்றும் கரைச்சி பிரதேச சபைகள் குறித்தும் நாம் சட்டமா அதிபருடன் கலந்துரையாடவேண்டியுள்ளது. 

எவ்வாறு இருப்பினும் செவ்வாய்க்கிழமை உள்ளூராட்சி மன்ற திருத்த சட்டம் வர்த்தமானி அறிவித்தலுக்கு விடப்படும் வாய்ப்புள்ளது என்றார்.