Breaking News

மனுஸ் தீவு தடுப்புமுகாமில் வசித்த இலங்கைத் தமிழ் ஆண் ஒருவர் தற்கொலை!

மனுஸ் தீவில் அவுஸ்ரேலிய குடிவர வுத் தடுப்பு முகாமில், இலங்கைத் தமி ழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒரு வர் இன்று அதிகாலையில் 32 வயது டைய இலங்கைத் தமிழ் ஆண் ஒரு வர், மருத்துவமனையில் மரணமான தையடுத்து  தற்கொலையென பபுவா நியூகினியா காவல்துறை தலைவர் டொமினிக் ககாஸ்  தெரிவித்துள்ளா ர்.  இவர் லொரென்கு மருத்துவமனை யில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என அகதிகள் நடவடிக்கை கூட்ட ணியைச் சேர்ந்த இயன் ரின்ரோல் குறிப்பிட்டதுடன் மருத்துவமனையின் சமையல் கூடத்திற்கு அருகே இவரது உடல் காணப்பட்டுள்ளது. 

மனுஸ் தீவு முகாமில், இரண்டு மாதங்களில் நடைபெற்றுள்ள இரண்டாவது உயிர் மாய்ப்பு மரணம் எனவும், கிழக்கு லோரென்கு இடைத்தங்கல் நிலை யத்தில் குறிப்பிட்ட நபர் தனக்குத் தானே பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சம்ப வத்தையடுத்து, மூன்று நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 மனுஸ் தீவு முகாமில், சிறிலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 ஆண் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுளுக்கு முன்னர் இந்த முகாம்  ஆரம்பித்த பின் நடைபெற்ற ஆறாவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.