ராமேஸ்வரம் மீனவர்களுக்காக ‘மீனாய் இவன்’ எனும் குறும்படம் !
மீனவர்களுக்காக ‘மீனாய் இவன்’ என்ற தலைப்பில் குறும்படம் தயாரா கியுள்ளதுடன் சினிமாவில் இயக்கு னராக கால்பதிக்க இன்றைய இளை ஞர்கள் பல்வேறு விதங்களில் ஆய த்தமாகியுள்ளனர்.
மேலும் குறும் படம் தயாரித்து தங்க ள் திறமையை வெளிப்படுத்துவதுடன் இந்த முயற்சியில் இறங்கி இருக்கும் இளைஞர் அய்யனார். மீனவர்களின் நலனுக்காக குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்காக ‘மீனாய் இவன்’ எனும் குறும் படத்தை தெரிந்தெடுத்து ள்ளனர்.
இதுபற்றி கூறிய அய்யனார்..
“தமிழக மீனவர்கள் பிரச்சினை 1974-ல் தொட ங்கி 43 ஆண்டுகளாக நீடிப்பதை கவன த்தில் எடுத்து சென்னை முதல் தனு ஷ்கோடி, ராமேஸ்வரம், கச்சத்தீவு வரை சென்று குறும் படத்தை தயார் செய்துள்ளோம்.
கச்சத்தீவு அருகில் அமைந்துள்ள இந்தியா – இலங்கை சர்வதேச கடல் எல்லையை காண்பிப்பதற்காக பாம்பன் மீனவர்களின் உதவியுடன் கச்சத்தீவு வரை கடலில் 27 கிலோ மீட்டர் பயணத்திலே படத்தை தயார் செய்தோம்.
இது சவால் நிறைந்த பயணம் இதன் மூலம் மீனவர்களின் தினசரி சவா ல்களை எதிர்கொண்டோம்.
இக் குறும் படம், சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு மீனவரின் மகன் வளர்ந்து மீனவர்களுக்காக போராடத் தொடங்கும் கதை கருவை சுமந்துள்ளது.
18 ஒளிப்பதிவாளர்களை வைத்து படமாக தொகுத்துள்ளோம். இது பலமான கதை மட்டுமல்ல, மீனவர்களுக்கு பலம் சேர்க்கும் கதை” என்பது குறிப்பிடத்தக்கது.










