ஒருமித்த நாடு என்பதை ஒருபோதும் அனுமதியோம்
தினேஷ் சூளுரை; வடக்கு,கிழக்கு பிரிந்து செல்லும் அபாயம் என்கிறார்.
ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை முன்வைத் தால் அதனை நிச்சயமாக கூட்டு எதிரணி தோற்கடிக்கும். விசேடமாக சர்வஜன வாக்கெடுப்பின் போது நாங்கள் அதனை தோற்கடிப்போம் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாரா ளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
ஒருமித்த நாடு என்பது சமஷ்டி முறைமைக்கு சமனானதாகும். எனேவ ஒரு மித்த நாடு என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தால் நிச்சயம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையிலிருந்து பிரிந்து சென்று விடும் அபாயம் ஏற்படும். அதனை நாங்கள் மக்களுக்கு உணர்த்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒருமித்த நாடு என்ற முறைமைக்கு கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பை வெ ளியிட்டு வருகின்ற நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன மேலும் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
ஒருமித்த நாடு என்ற முறைமையுடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதற்று இடமளிக்க மாட்டோம்.
அதனை நாங்கள் நிச்சயம் தோற்கடிப்போம்.
சர்வஜன வாக்கெடுப்பு இதற்காக நடத்தப்படும் பட்சத்தில் அதனை கூட்டு எதிரணி தோற்கடிக்கும். எமது நாடு தற்போது ஒற்றையாட்சி முறையிலேயே காணப்படுகின்றது.
அதனை ஒருமித்த நாடு என மாற்றுவதானது ஒரு கூட்டிணைந்த நாடு என்ற நிலைமையை ஏற்படுத்திவிடும். ஒருமித்த நாடு என்ற முறைமையானது கிட்டத்தட்ட சமஷ்டி முறைமைக்கு சமமானதாகும்.
இதன்கீழ் தேவையெனின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்து செல்லும் அபாயமும் ஏற்படலாம். எனவே இதற்கு இடமளிக்க முடியாது.
ஒற்றையாட்சி என்று வரும்போது எந்தவொரு மாகாணத்தினாலும் தனித்த பிரிந்து செல்ல முடியாது.
ஆனால் ஒருமித்த நாடு என்று வந்தால் நிச்சயம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்து செல்லும் அபாயம் ஏற்படும். எனவே இதனை தோற்கடிக்க வேண்டிய தேவை எமக்கு காணப்படுகிறது.
நாங்கள் மக்களிடையே இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அதனூடாக ஒருமித்த நாடு என்ற பதத்துடன் அரசியலமைப்பு வந்தால் நிச்சயம் அதனை சர்வஜன வாக்கெடுப்பில் தேற்கடிப்போம் என்றார்.








