Breaking News

சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் மாணவி தற்கொலை !

சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இளம் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து கொதித்தெழுந்த மாணவர்கள், பல்கலைக்கழகத் தளபாடங்களுக்குத் தீ வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலையில் அண்மையில் பரீட்சை ஒன்று நடைபெற்றுள்ளது. அதில், விடைகளைப் பார்த்து எழுதியதாகக் கூறி பதினெட்டு வயது மாணவி ஒருவரை பரீட்சை கண்காணிப்பாளர் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளி யேற்றியுள்ளார். 

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, நேற்று (22) மாலை பல்கலைக்கழக விடுதியிலுள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவியின் இரட்டைச் சகோதரரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ் விவகாரம் மாணவர்களிடையே பரவியதால் கொதித்தெழுந்த மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியிலுள்ள தளபாடங்களுக்குத் தீ மூட்டியுள்ளனர். 

இன்று அதிகாலை வரை தொடர்ந்த போராட்டங்கள், பொலிஸாரின் வருகை யுடன் கைவிடப்பட்டன. மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.