Breaking News

பைசர் முஸ்தபாவுக்கு முரணான நம்பிக்கையில்லா பிரேரணை - ஜே.வி.பி

எதிர்வரும் சில தினங்களில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற ங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவு க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரே ரணை ஒன்றைக் கொண்டுவர ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி இன் தலைமையகத்தில் இன்றைய தினம் முற்பகல் வாராந்த ஊடகவியலா ளர் சந்திப்பில்  கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இச் செய்தியை தெரிவித்து ள்ளார். 

கடந்த 2 வருடங்களாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இத் தேர்தல் இடம்பெறுமென்ற உறுதி மொழியை அரசாங்கம் வழங்கியி ருந்த போதிலும், வர்த்தமானிக்கு எதி ராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மீண்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படவுள்ள நிலையில் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரே ரணையை கொண்டு வர ஆலோசித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.